தவெக மாநாட்டுக்கு வரும்போது வழியில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த நிர்வாகிகளின் குடும்பத்திற்கு அக்கட்சி தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சனிக்கிழமை முதலே தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் விக்கிரவாண்டி நோக்கி படையெடுத்தனர். மாநாட்டுக்கு வரும்போது தொண்டர்கள் பாதுகாப்பாக வரவேண்டும் என முன்னதாகவே அறிவுறுத்தியிருதார். இந்த நிலையில், எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் வரும் வழியிலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில், விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு விஜய் மாநாட்டு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டிவந்தனர். இந்த நிலையில் அக்கட்சி பொதுச்செயலாளர் திருச்சியில் உயிரிழந்த நிர்வாகி வீட்டுக்கு அஞ்சலி செலுத்த சென்றனர். அவரை சூழ்ந்த உறவினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அந்த இரங்கல் அறிக்கையில், நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் திரு. கில்லி VL.சீனிவாசன், திரு. JK.விஜய்கலை, சென்னை பாரிமுனையை சேர்ந்த திரு. வசந்தகுமார், திரு. ரியாஸ், செஞ்சியை சேர்ந்த திரு. உதயகுமார் மற்றும் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்த வில்லிவாக்கத்தை சேர்ந்த திரு.சார்லஸ் ஆகியோர் இன்று நம்மிடையே இல்லை என்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிக்கிறது.
கழகத்திற்காக இவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். கழகத் தோழர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன். மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள் விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். என தெரிவித்துள்ளார்.நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, விக்கிரவாண்டி வி.சாலை நோக்கி வரும் போது, எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்த கழகத் தோழர்கள்,
— TVK Vijay (@tvkvijayhq) October 28, 2024
வழக்கறிஞர் திரு. கில்லி VL.சீனிவாசன்,
திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர்
திரு. JK.விஜய்கலை,…